தருமபுரி அடுத்த ஏமக் குட்டியூர் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், விநாயகர், பார்வதி பரமேஸ்வரர், நவகிரகங்கள், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது . இந்த விழாவையொட்டி கணபதி ஓமம், பூர்த்தி ஓமம், யாக சாலை பூஜைகளை தொடர்ந்து தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர், மத்திய கவுண்டர், கோயில் அர்ச்சகர், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் மற்றும் சுவாமிகளை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது



