நாகர்கோவில் டிச 3
2019ம் ஆண்டில்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்_நடூர்
கிராமத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து பலியான 17போராளின்
5ஆம் ஆண்டு நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்த தலைவர்
நாகை_திருவள்ளுவன்
வருகை தர இருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்,
அவருடைய கைதை கண்டித்தும், தலைவர் நாகை.திருவள்ளுவனை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் நாகர்கோவிலில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது,
உடன் கன்னியாகுமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் குமரேசன் மற்றும் குமரி மாவட்ட ஜெய் பீம் எழுச்சி இயக்க கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.



