ஜன:21 திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள ஆண்டிப்பாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டிப்பாளையம் ஏரியினை சுற்றுலா தளமாக மேம்படுத்தி படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் போன்றவற்றை அமைக்கப்பட்டு படகு இல்லத்தை கடந்த ஆண்டு முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர்ஈ. பி. அ. சரவணன் மாவட்ட கலெக்டர் இடம் கட்டணத்தை குறைக்க கோரி மனு அளித்தார்.
இங்கு எட்டு பேர் அமர்ந்து சவாரி செய்யக் கூடிய, 2 மோட்டார் படகு, 3 துடுப்பு படகு, 8 பெடல் படகு என, 13 படகுகள் உள்ளன.ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் படகு சவாரி செல்ல முடிவதில்லை. கட்டணத்தை குறைக்க வேண்டும்.உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு கட்டணத்தை குறைக்கும் பட்சத்தில் ஏராளமான தொழிலாளர்கள், பொது மக்கள் வருகை தறுவார்கள் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.