தஞ்சாவூர். பிப்.21.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்
தமிழகத்தில் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தலைமை அலுவலகத்தின் மூலம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் சர்வதேச அளவிலான 8 லைன் தடகள ஓடுபாதை அமைக்க செயற்கை இழையில் ஓடுதள பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நிதியிலிருந்து 90 நாட்களுக்குள் இயற்கை முறையில் புல் நடுவதற் கு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சத்யா விளையாட்டரங்கில் கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை புல் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்திருந்த பணியாளர்கள் புல் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் கள்மற்றும் அலுவலக பணியாளர் கள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.



