மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் அமைதி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தி மாணவர்களிடம் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சியாக உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத்தின் அமைதி கல்வி திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் இரத்தினவேல் தொடங்கி வைத்தார். அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளிருக்க’ம் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல். தன்மானம், தேர்ந்தெடுத்தல் நம்பிக்கை. நிறைவு ஆகியவற்றை விளக்கிய உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத்தின் காணோளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தன்னார்வலர்கள் பாஸ்கரன் பிரவீனா உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பை நடத்தினர். இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று 1 மணிநேரம் பயிற்சி வகுப்பு 10 வாரங்கள் நடத்தப்படுவதாகவும், இதில் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்’தி அவர்களின் உள்மனதில் உள்ள ஆற்றலை கண்டறிந்து வெளிகொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பயிற்சியை நடத்தும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். பயிற்வி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.



