தஞ்சாவூர் ஜன.10.
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவ ர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் கூட்டத்தில் கல்லூரி முதல்வர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் .
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளதா? எனவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா ? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் கல்வி நிறுவனங் களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உள்ளதா? என கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்
கல்லூரி வளாகத்தை தூய்மை யாக வைத்து வைத்திருத்தல் வேண்டும் .பார்வையாளர்கள் வருகை பதிவேடு கடை பிடிக்க வேண்டும் .மாணவ மாணவிகள் நலனின் அக்கறை கொண்டு எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தது வேண்டும். கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் கல்வி நிலைய வளாகங் களில் முன் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது .மாணவ மாணவிகள் கல்வி திறனின் மேம்பட்டு விளங்க பங்களிப்பை செயல் செய்ய வேண்டும் .கல்லூரி கல்வி இணை இயக்குனரும் கல்லூரிகளுக்கு சென்ற முறை யாக நடைபெறுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்
கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )சரவணகுமார் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கிய (தஞ்சாவூர்) ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரோசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.