நாகர்கோவில் ஜூலை 22
தமிழ் நாட்டில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் இவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசை கண்டித்து
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜுலை 23-ம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறுகிறது கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, அழைப்பு.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், புரட்சித்தமிழருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, தி.மு.க அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் கண்மூடித்தனமாக மக்கள் நலனை எண்ணிப்பாராமல், மக்களை துன்பப் பெருங்கடலில் தள்ளிவிட்டு அவதிக்குள்ளாக்கும் வகையில் தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்ற பருப்பு, பாமாயில் இவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசை கண்டித்தும், குமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 23-07-2024 செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நடைபெறுகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர வார்டு கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கழக தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மக்களுக்கு எதிராக மின் கட்டண உயர்வை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், இதைப்போன்று மக்களுக்கு அத்தியாவாசியமான பருப்பு, பாமாயில் இவற்றை நியாய விலைக் கடைகளில் நிறுத்துவதை கண்டித்தும் எதிர்ப்பு கண்டன குரல் எழுப்பி தி.மு.க அரசுக்கு கழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்ய அணி திரள்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



