கன்னியாகுமரி ஜூன் 3
ஆட்சி அதிகாரத்தை சுவைத்து வந்திருந்த கட்சிகளுக்கு இந்த 2026 தேர்தல் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் தரும் தேர்தலாக அமைவது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும்
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் – தீபக் சாலோமன் அறிக்கை.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 களம் நாம் இதுவரை சந்தித்திராத வகையில் புதிய பரிணாமத்தில் வரும் ஆண்டு நடைப்பெற தயாராகி வருகிறது .
காலங்காலமாக தேர்தல் வெற்றிகளையும் ஆட்சி அதிகாரத்தையும் சுவைத்து வந்திருந்த கட்சிகளுக்கு இந்த தேர்தல் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் தரும் தேர்தலாக அமைய போவது உறுதி.
மக்களை ஏமாற்றி வாக்குகளை விலை கொடுத்து வாங்கி பெற்று வந்த தேர்தல் வெற்றிக்கணக்குகள் பொய்த்து போகவிருக்கும் தேர்தலாக அமைய போவது எதார்த்தமான நடைமுறை உண்மை.
மக்கள் தாங்களே இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான அரசியலை சரியாக முடுவு செய்யப்போகும் இந்த தேர்தலுக்காக காத்து கொண்டிருப்பது தமிழகம் முழுக்க நன்றாக உணர முடிகிறது.
குமரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேவையும், மக்கள் மனதில் கடந்த ஆண்டுகளில் கட்சி ஆழமாக ஊடுருவியுள்ள வளர்ச்சியையும் காணும் போது மக்களே எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முன் வைக்கும் தத்துவங்களையும் கொள்கைகளையும் விரும்பு கட்சியை நோக்கி நகர்ந்து வருவதை காண முடிகிறது. தொடர்ச்சியான மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் குமரி மண்டல நிர்வாகம் தற்போது தங்களது கிளை கட்டமைப்புகளை கட்டி அமைத்து வருவது 2026 தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்து வருகிறது.
அடுத்த 20 ஆண்டுக்கு உகந்த அரசியல் இலக்கு மற்றும் கொள்கைகளை முன் வைத்து நகரும் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க போவதை தமிழகம் நிச்சயம் காணும் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.