குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட்டம் முத்தலக்குறிச்சி கூனான் கானி சாஸ்தா திருக்கோயிலில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன் படி கும்பாபிஷேக திருப்பணி ரூ. 24.70 லட்சம் செலவில் வேலைகள் துவங்கபட உள்ளன. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதீஷ்குமார், மராமத்து பிரிவு பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியம் ரமேஷ் குமார், சிவக்குமார், திமுக முளகுமோடு பேரூர் செயலாளர் எட்வின் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல் கோடி யூர் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் ௹ 21.60 லட்சம் செல விலும், கப்பியரை அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் ரூ 17.80 லட்சம் செலவிலும் திருப் பணிகள் துவக்க விழா குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டன.
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட்டம் முத்தலக்குறிச்சி கூனான் கானி சாஸ்தா



