பெரியகுளம், ஜூன் 08 –
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடத்தி அந்த மாணவ மாணவிகளை கெளரவப்படுத்தி ஊக்கத்தொகை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மாணவ/மாணவியர்களை கெளரவப்படுத்தும் வகையில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ/மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடுகபட்டி பேரூர் மாணவரணி சார்பில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சபரி கணேஷ் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை வடுகபட்டி மாணவரணி தலைமை வெங்கடேஷ்வரன் செய்திருந்தார்.
இவ்விழாவில் 10 &12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் காசோலையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 5 ஆயிரம் காசோலையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 3 ஆயிரம் காசோலையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் உள்ளிட்ட நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தவெக பேரூர் விஜயக்குமார், இளைஞரணி மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ் ராஜா, பேரூர் உறுப்பினர் நிதிஷ்குமார் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



