போடி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மாணாக்கர்களுக்கு விலையில்லா அரசு மிதிவண்டிகள் வழங்கினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன்,ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால், கிளைக் கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், ,இருபால் ஆசிரியர பெருமக்கள் என பலர் உடன் இருந்தனர். இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.



