பூதப்பாண்டி, அக்டோபர் 02 –
பூதப்பாண்டியை அடுத்த எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சங்கர் (47). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அழகிய பாண்டியபுரத்திலுள்ள பெரிய குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது குளத்தின் படிக்கட்டு வழுகி கீழே விழுந்ததில் இவரது தலையில் அடிபட்டு இறந்துள்ளார். இறந்த சங்கருக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


