சிவகாசி ஆக 13-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அருகே வாகன காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு வரும் வாகனங்கள் முதல் தளத்திலும் தரைத்தளத்திலும் நிறுத்திச் செல்லும் வசதி உள்ளது. தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் சில நேரங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத நிலை உருவாகிறது. வாகன காப்பகத்தின் அருகே உள்ள இடத்திலும் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இந்த இடம் சாலை பரப்பிலிருந்து மிகவும் தாழ்வாக இருக்கிறது. வேறு வழி இல்லாமல் இந்த இடத்திலும் வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர். மீண்டும் அவர்களது வாகனத்தை எடுக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வாகன நிறுத்தம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே கட்டிட வேலைபாடுகள் நடந்து வருகிறது. சிறிது மண்ணை எடுத்து இந்த தாழ்வான இடத்தில் போட்டு இந்த தாழ்வான இடத்தை சற்று உயரதை அதிகமாக்கினால் வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.