வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் பேட்டை இ.வே.ரா. பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா நாகம்மையார் அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.97 கோடி மதிப்பில் நபார்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா,சுப்புலெட்சுமி மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர், இந்நிகழ்வின்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் மா.சுனில்குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



