By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்

Last updated: July 8, 2025 5:35 pm
July 8, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 8 –

குமரி மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் “நோ ஹெல்மெட், நோ என்ட்ரி” விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நடக்கும் விபத்துகளில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உயிரிழப்புகள் தலைக்காயம் மூலமே நிகழ்கின்றது. மேலும் பைக் விபத்துகள் தான் அதிகம் அரங்கேறுகின்றன.
இதை கருத்தில் கொண்டு தான் “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி” விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் நள்ளிரவில் பைக் ஓட்டி சென்று விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. கடந்த வாரம் நாகர்கோவில் அருகே நள்ளிரவில் பைக் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக இருந்தனர். இதை அடுத்து போலீசாருக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாகர்கோவிலில் நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பைக்கில் வந்தவர் உயிர் தப்பினார். நாகர்கோவில் டதி ஸ்கூல் சந்திப்பில் தக்கலை செம்பருத்தி விளையை சேர்ந்த பெலிக்ஸ் ராஜ் (36) என்பவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வந்து கொண்டிருந்தார். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர் டதி ஸ்கூல் சந்திப்பில் இருந்து கோர்ட் ரோட்டில் திரும்பும் சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் பைக்கை இடித்தது. இதில் பைக் காருக்கு அடியில் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு பெலிக்ஸ் ராஜையும் சேர்த்து இழுத்துச் சென்றது. இதில் பெலிக்ஸ் ராஜுக்கு கை, கால், மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் சாலையில் வேகமாக விழுந்து தலை இடித்த சமயத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

விபத்து ஏற்படுத்திய பின்னரும் காரில் இருந்தவர் கீழே இறங்கவில்லை. இது குறித்து டிராபிக் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெலிக்ஸ் ராஜ் உயிர் தப்பியது தெரியவந்தது. அவரை பாராட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் இந்த விபத்தில் உயிர்பலி நடக்கவில்லை என போலீசார் கூறினர். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்லுங்கள், ஹெல்மெட் தலையில் மாட்டியதும் முறையாக ‘லாக்’ செய்ய வேண்டும் என்றும் டிராபிக் எஸ். ஐ. சுமித் கூறினார்.

குமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
5வது திருமணம் செய்ய போன மனைவி
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை; உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்ததாக தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்

April 9, 2025
29 Views
ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு
காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account