மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்துள்ளது கதிராமங்களம் இங்குள்ள சித்தர்புரத்தில் அருள்வாக்கு சித்தர் திலகராஜா சுவாமி அவர்களால் 18ம் படி சங்கிலி கருப்பண்ண சுவாமி, விநாயக பாலமுருகன் வராகி, சடாமுடி சித்தர், ஜடாமுனிஸ்வரன் அகோர வீரபத்திரன், மகாகாளி ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ப்த கண்ணிகள் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிசேகத்தையொட்டி யாக சாலையில் புனித நீர் கடங்கள் வைத்து வேத விற்பன்னர்களை கொண்டு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது.யாக சாலையில் மகாபூர்ணகுதி நடைபெற்று பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து. சென்று மேல தாளம் முழங்க 18 ம் படி கருபண்ண சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.இக்கும்பாபிசேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 18ஆம் படி கருபண்ண சுவாமியின் அருளை பெற்றனர்.



