மதுரை ஜூன் 24,
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி முப்பழம் உற்சவ விழா நடைபெற்றது. இதில் மா, பலா, வாழை, ஆகிய முக்கனிகளை படைத்து, கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. திருவிழாவில் விவசாயிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர். இக்கோவிலன் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், துணை ஆணையர், அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.