கிருஷ்ணகிரி. ஜன. 18. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் சின்னாறு பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் எல்.செல்வம் தலைமையில், பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழாவில் 108 கிலோ கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து புகழஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் பிரத்தியேகமாக செய்யப்பட்ட 108 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் சந்திரப்பன், இளைஞரணி செயலாளர் முருகன், அமைப்புசாரா அணி செயலாளர் ராஜா (எ) ஜெயக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி தலைவர் சித்தையன், சின்னாறு பகுதியைச் சேர்ந்த மல்லையன், கிருஷ்ணன், மல்லேஷ், நாராயணசாமி, ஆறுமுகம், மாணிக்கம், முனிராஜ், சண்முகம், சங்கர், முனியப்பன், சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், சார்பு அணி கழகத் தொண்டர்கள், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவி அம்மா ஆட்சியை, எடப்பாடியாரின் தலைமையில் அமைப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.



