கன்னியாகுமரி, மார்ச் 23 –
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில்க் 230 ஆண்டுகள் பழைய தேர் சேதமடைந்ததால் புதிய தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய திருப்பலிக்கு பின் தச்சு பணிகள் தொடங்கப்பட்டது.
புதிய தேர் ரூ.35 லட்சம் செலவில், 31 அடி உயரம், 12 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் திருவிழாவுக்கு முன் பணிகள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்வில் திருத்தல பங்கு பணியாளர் உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன் மற்றும் திரளான பங்கு மக்கள் பங்குப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



