கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாவட்ட பொதுச்செயலாளராக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் முனைவர் சுபுகான் பரிந்துரையை ஏற்று மாநில தலைமையின் ஒப்புதல் உடன் கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராபி நியமனத்தை செய்தார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட
அவர் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.



