தருமபுரி, செப்டம்பர் 20 –
தருமபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மணியம்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், ரோஜா பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் பி.சி.ஆர். மனோகரன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு பக்தர்கோடிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம் அக்கமஹள்ளி ஊராட்சி மூக்கனூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அலர்மேல் மங்கை உடனாகிய அருள்மிகு ஆதி மூல வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் பக்தர் கோடிகள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர். திருக்கோவில் சார்பில் பக்தர் கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



