கிருஷ்ணகிரி, டிச. 11 –
ஊத்தங்கரை வட்டாரத்தில் 9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் சமம் செய்து பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியம் கெரிக்கேப்பள்ளி ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ளது, அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை முறைகேடாக சமன் செய்து பிளாட்டுகளாக மாற்றி தனி நபர் ஒருவர் விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கிடைத்த தகவலின் பேரில்,
வருவாய் துறையினர் விரைந்து சென்றனர், அவர்களை கண்டதும் அங்கு பணிபுரிந்த அனைவரும் ஓடிவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் புஷ்பா சாமல்பட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் மீது புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள ஹிடாச்சி வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தை சென்சார் லாக்’ செய்து விட்டு தப்பி சென்றுவிட்டதால் வாகனத்தை நகர்த்த முடியாமல் காவல் துறையினரும் வருவாய் துறையினரும் அந்த இடத்திலேயே இரண்டு நாட்களாக உள்ளனர்.
இது தொடர்பாக வட்டாட்சியரிடம் கேட்டதற்கு: ஊத்தங்கரை வட்டாட்சியர் சம்மந்தப்பட்ட ஆக்கரமிப்பாளரை விசாரிக்க அலைபேசியில் வர சொன்னதற்க்கு வரவில்லை, மேல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்த பிறகு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் மூன்று மாதங்களாக நடந்த இந்த செயல்பாட்டில், நிலத்திலிருந்து 200 டன்னுக்கும் அதிகமான சுண்ணாம்பு கல் (லையம் ஸ்டோன்) அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டு குவிக்கப்பட்டது. கனிமச் சட்டத்தையும், அரசுக் கடமைகளையும் முற்றிலும் மீறும் இந்த செயல் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது அலுவலரின் அலட்சியமா கூட்டு செயலா என்கின்றனர்.



