கிருஷ்ணகிரி, நவ. 24 –
கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தி, குருதட்டனூர், சிக்கபூவத்தி, வெலகள்ளி, பாலிகானூர், அவதானப்பட்டி, முல்லைநகர் உள்ளிட்ட ஆகிய 10 கிராமங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்கிற தலைப்பில் கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு மூலம் விழிப்புணர்வு மேற்க்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் .தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி ஒன்றிய பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைப்பெறும் கிராமங்களில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அலுவலர் சக்திசுபாஷினி அவர்களின் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த சேவை செய்து வரும் “அன்பு செய்வோம் அறக்கட்டளை” நிறுவனரும், சமூகசேவைக்கு சிறந்த இளைஞருக்கான தமிழக அரசு விருதை பெற்றவருமான கௌரி அவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தை திருமணம் தடுப்பு பெண்கல்வி அவசியம் குறித்து மூன்று நாட்கள் பல்வேறு கிராமங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.



