வேலூர், செப். 22 –
வேலூர் மாவட்டம் வேலூர் முத்துமண்டபம் பகுதியில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் இன்று புரட்டாசி மாத மஹாளயா அமாவாசையை முன்னிட்டு உயிர் நீத்த தங்களின் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து வேதவிற்பனர்களை கொண்டு வேதமந்திரங்கள் முழங்க முன்னோர்களின் திதியையொட்டி தர்பனம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.



