சுசீந்திரம், டிச. 2 –
நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தை சார்ந்தவர் இசக்கிமுத்து ஆசாரி. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மூத்த மகன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். கடந்த 28ம் தேதி ஊருக்கு வந்தவர் தனது மனைவியிடம் மன வருத்தத்துடன் போனில் பேசி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் தென்னந்தோப்பில் விஷம் அருந்தி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்து உள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் அவரது மகன் கல்யாண்குமார் மற்றும் உறவினர்கள் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்து விட்டு சுசீந்திரம் காவல் நிலையத்தில் அவரது மகன் கல்யாண்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


