நாகர்கோவில், நவ. 22 –
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான ‘திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூகநீதி பயணம்’ எனும் தலைப்பில் நடைபெறும் பயணத்தை கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து துவங்கியது. இந்தப் பயணத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு. ஜக்கையன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



