களியக்காவிளை, டிச. 19 –
களியக்காவிளை மடிச்சல் ஈஞ்சப்பிரிவினை பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57). இவர் படந்தாலுமூட்டிலிருந்து மடிச்சல் செல்லும் சாலையில் பழம் மற்றும் ஜூஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அரசு மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். 24 மணி நேரமும் விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையில் மதுபானம் விற்பது போன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இது சம்மந்தமான செய்தி தினத்தமிழ் நாளிதழில் நேற்று வெளியானது.
இதை அடுத்து விரைந்து சென்ற களியக்காவிளை போலீசார் சத்யதாசை |கைது செய்தோடு மது பாட்டல்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவரை களியக்காவிளை போலீசார் இந்த ஆண்டு ஏற்கனவே 4 முறை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ததாகவும், இந்த மாதம் மட்டும் இரண்டு முறை கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


