கன்னியாகுமரி, ஜன. 5 –
கன்னியாகுமரி, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் மகன் சுதர்சன் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். அப்போது கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பு பகுதியில் வைத்து 2 வாலிபர்கள் பைக்கை வழிமறித்து, டாஸ்மாக் கடை சென்று வர பைக் வேண்டும் என கேட்டுள்ளனர்.
பைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் சுதர்சன் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் தாக்கியதில் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சுதர்சன் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை வெட்டியது கன்னியாகுமரி சுனாமி காலணி சேர்ந்த டேவிட் மகன் விஜிஷ் (18), பால்குளத்தை சேர்ந்த ராஜபிரியன் மகன் அபிஷேக் (24) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தனர். தலைமறைவான விஜிஷை தேடி வருகின்றனர். இதில் விஜிஷ் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


