குளச்சல், நவ. 14 –
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவ தினம் மாலையில் வெள்ளி சந்தையில் உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்யும்போது, அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சூரப்பள்ளம் பகுதி சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ராஜகுமாருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.


