நாகர்கோவில், ஏப். 29-
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் மகன் லிவிஸ் என்பவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது உறவினர் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ராஜன் (64) என்பவர் பழக்கமானார்.
அவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவருடன் சேர்ந்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலு மணி (48), வில்லுகுறியை சேர்ந்த தனசாமி (51) ஆகியோரும் சேர்ந்து சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஜஸ்டின் ஜோஸ் மனைவி ஷோபா மேரி (46) என்பவரிடம் இருந்து 2,88,100 ரூபாய் பணமாக பெற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விசா ரெடியாக இருப்பதாக கூறி நாகர்கோவில் செல்ல அழைத்துள்ளனர். இதை நம்பிய ஷோபா மேரி தனது குடும்பத்துடன் நாகர்கோவில் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த பின்னர் ராஜன் உள்ளிட்டவர்கள் வரவில்லை. பின்னர் போனில் தொடர் கொண்டபோது, நாங்கள் அழைக்கும் போது மீண்டும் வாருங்கள் என கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஷோபா மேரி குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி யிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இதை அடுத்து ஷோபா மேரி புகாரின் பேரில் ராஜன், பாலுமணி, தனசாமி ஆகிய 3 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


