மதுரை பிப்ரவரி 14,
மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்
மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே வரிகளை வருவாய் உதவியாளர்களின் POS இயந்திரம் மூலம் செலுத்தும் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு 2024 – 2025 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி இனங்களை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு POS இயந்திரம் வழங்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம், தொழில்வரி, சேவைக்கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே வருவாய் உதவியாளர்கள் வைத்துள்ள POS CREDIT CARD, DEBIT CARD, UPI ID QR SCAN மூலமாக வரிகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக தங்கள் இருப்பிடத்தில் இருந்தே செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.