நாகர்கோவில் – நவ- 16,
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் ஆய்வு மேற்கொண்டார். மேற்படி காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் நிலைய பதிவேடுகள்,அரசு சொத்துக்கள், வழக்கு கோப்புகள்,துப்பாக்கி தோட்டாக்கள் ஆய்வு செய்தார்கள்
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலைய பதிவேடுகள், அரசு சொத்துக்கள்,வழக்கு கோப்புகள் சம்பந்தமாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு , பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்கள். காவல் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், புகார் அளிக்க வரும் பொதுமக்களுடன் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் உடனிருந்தார்கள்.