திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் இந்திய ஜனநாயக கட்சியின் 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் ,பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகள் தலைமை நிலை பொறுப்பாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் தங்களது தொகுதிகள் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் 45 இணைப்பு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பேசினார் . இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் அசோக்ராஜ்க்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி 3 தொகுதிக்கு பொறுப்பாளராக அறிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் திலீபன், தலைமை நிலை மாநில பேச்சாளர் ஸ்ரீராம்,பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ.ஜோஸ்வா, நிலக்கோட்டை சட்டமன்ற தலைவர் சேகர், வேடசந்தூர் தொகுதி விடியல் விஜயகுமார், நத்தம் தொகுதி தலைவர் பரமசிவம், கொடைக்கானல் நகர தலைவர் நேதாஜி, சகாயம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



