சென்னை, பூந்தமல்லியில் அட்சய திருதியை நாளன்று எம்.எம். தங்க மாளிகையின் கோலாகல திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
80 ஆண்டுகள் பாரம்பரியமிக்க எம்.எம்.தங்க மாளிகையினை ஸ்ரீமதி நீதா பிரவீன் கும்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், பூவை எம்.ஜெயக்குமார், பூவை எம்.ரவிக்குமார், பூவை இரவிச்சந்திரன், AGR திருமலை, பான் புரோக்கர் அசோசியேஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் எம்.எம் தங்க மாளிகையின் உரிமையாளர்கள் எம்.இராஜேந்திர குமார், எம்.ஆர்.தர்ஷன் ஜெயின் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.