சென்னை, அக்டோபர் 15 –
மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் (MCCHSS) 190-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு லேசர் 2025 அறிவியல் கண்காட்சி சென்னை சேத்துபட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் 62 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் புதுமையான தொழில்நுட்பம் & செயற்கை நுண்ணறிவு காலநிலை மாற்றம் & பேரிடர் மேலாண்மையை எதிர்த்துப் போராடுதல், இயற்கை வேளாண்மை & உணவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் போட்டியிடும் வகையில் சுமார் 120 திட்டங்களை வழங்கினார்.
லேசர் – 2025 கண்காட்சியானது பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் நீண்டகால கல்விச் சிறப்பு மற்றும் சமூக ஈடுபாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது.
இத்தொடக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ரீட்டா ஜான் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார்.
தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் உடனிருந்தார்.



