சென்னை, செப். 06 –
சென்னை, விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள அருள்மிகு மஹா காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயில் நிகழும் ஸர்வ மங்களகரமான ஸ்ரீ செல்வ விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, ஆஞ்சநேயர், நவகிரஹம், சப்த மாதா, நாகர், அரசு விநாயகர், உற்சவ தெய்வங்கள் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை மண்டலம் 11 இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, ஆலய நிர்வாக அதிகாரி ஜி. முரளிதரன், தலைவர் துரைசங்கர் மற்றும் தயாளன், ராஜன் மேலும் ஆலய விழா குழுவினர் நிர்வாகிகள் கும்பாபிஷேகத்தினை சிறப்பாக செய்திருந்தனர்.



