தஞ்சாவூர் மார்ச் 26.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத் து தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நுரையீரல் துறை சார்பில் உலக காச நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
இந்த ஊர்வலத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் பாலசுப்ரமணியன் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் துணை இயக்குனர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட காச நோய் மைய மருத்துவ அலுவலர் முகமது கலீல் அனைவரையும் வரவேற்றார்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்காபங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .ஊர்வலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தை சுற்றி வந்தது
இந்தஊர்வலத்தில்செவிலியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் மாவட்ட காச நோய் மைய துணை இயக்குனர் டாக்டர் மாதவி, மருத்துவக் கல்லூரி துணை முதல் ஆறுமுகம் , நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
பின்னர் மருத்துவமனை வளாக த்தில் நடந்த நிகழ்ச்சியில் காச நோய் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .அதைத் தொடர்ந்து காச நோய் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றன.



