தருமபுரி, அக்டோபர் 16 –
தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும் பொழுது கண்களில் ஏற்படும் தீ காயங்கள், கண் பார்வை பிரச்சனைகள் ஆகியவை ஏற்பட்டால் அனைத்து வாசன் கண் மருத்துவமனைகளிலும் அக்டோபர் 15 முதல் 24 வரை இலவச கண் பரிசோதனை முகாமில் கண்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான அனைத்து மருத்துவ செலவையும் வாசன் கண் மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த இலவச சேவை இந்தியா முழுவதும் உள்ள வாசன் கண் மருத்துவமனைகளில் நடைபெறும்.
மேலும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெற்றோர்கள் பாதுகாப்பில் பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சியை தருமபுரி வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பிரியா கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் சரண்யா, டாக்டர் சந்தோஷி, டாக்டர் ஆர்த்தி, டாக்டர் வித்யா ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கின்றனர். தீபாவளி திருநாள் அன்று பட்டாசு வெடிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பில் வெடிக்க செய்ய வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



