சென்னை, செப்டம்பர் – 18,
பசுமை புரட்சியின் மைல் கல்லாக அனைத்து வகை மின் வாகனங்களுக்கும் சார்ஜ் செய்யும் வகையில் டி. ஜே .டி ஹைக்கா நிறுவனம் உள்நாட்டில் தயாரித்த டி.சி சார்ஜர்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர் அறிமுகப்படுத்தினர் .
சென்னை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாநிதி வீராச்சாமி பேசியதாவது:-
அன்னியச் செலாவணி, கால நிலை மாற்றம் புவி வெப்பமடைதல், ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கடந்து நமது மக்களையும் இயற்கையும் பாதுகாக்க மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. மின்வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் நம் பணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உருவாகிறது . இது அனைத்து மனிதர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை பெற இது போன்ற முயற்சிகள் வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் டி.ஜே.டி ஹைக்கா நிறுவனர் சஞ்சய், நிர்வாக இயக்குநர் மணீந்தர், மற்றும் ஸ்மைல் எக்ஸ்இ.வி இயக்குநர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.