இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் வங்கி பற்று அட்டையினை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



