திண்டுக்கல், செப். 4 –
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே உள்ள தர்மாபுரி கிராம பொதுமக்களுக்கு பாத்தியபட்ட நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தாரை, தப்பட்டை, வானவேடிக்கைகள் முழங்க ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரம்மாண்ட யாகசாலையில் வைத்து கோபூஜை, சுமங்கலிபூஜை, வாஸ்துபூஜை உள்ளிட்ட ஐந்துகால யாகவேல்விகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை நடந்த வாஸ்து சாந்தி நிகழ்ச்சியை தொடர்ந்து சீனிவாசா சர்மா ஸ்வாமிகள், சிவாச்சாரியர்கள் சுரேஷ்பவுன் தலைமையில் கடாராம் புறப்பாடு நிகழ்ச்சியையடுத்து அருள்மிகு மதுரைவீரன் ஸ்வாமி திருவுறுவ சிலைக்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதை கண்ட பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இக்கும்பாபிஷேக விழாவிற்கு திண்டுக்கல், மதுரை, கோவை, நெல்லை, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், தர்மபுரி கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



