சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நகர ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் திமுக கூட்டம் வாழப்பாடியில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.திமுக இளைஞரணி மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் பிரசன்னா கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை புதிய நிர்வாகிகளுக்கு விளக்கினார்.கூட்டத்தில் உச்ச நீதிமன்ற மூலமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்று 10 சட்ட மசோதாவையும் அமலுக்கு கொண்டுவந்த முதல்வருக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது,தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆட்டையாம்பட்டி வாழப்பாடி ஆத்தூர் ராணிப்பேட்டை கெங்கவல்லி ஆகிய இடங்கள் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் சின்னதுரை கருணாநிதி ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் வேல்முருகன் சக்கரவர்த்தி விஜயகுமார் மூர்த்தி அன்பு சிவராமன் மாணிக்கம் அழகுவேல் செழியன் மணி சங்கர் சோமு சந்திரமோகன் கோபால் வெங்கடேசன் சுப்பிரமணிய பாபு வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு ரேவதி மாதேஸ்வரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics