சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ்,செயலாளர் கண்ணையன்,பொருளாளர் சந்திரன்,துணைத் தலைவர் பழனிச்சாமி,துணைச் செயலாளர் செல்வம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலை இருசக்கர ஹோண்டா கம்பெனி அருகில் பெரியாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் டி.பி.எஸ்.சேகர் எம்.சாண்ட் சேமிப்பு கிடங்கு அமைத்துள்ளார் .இதனால் தாரமங்கலத்தைச் சார்ந்த சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தா உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எம் சாண்ட் சேமிப்பு கிடங்கை அகற்ற வேண்டி மேல்முறையீட்டு மனு அளித்தனர்.சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த சங்கத்தில் தாரமங்கலத்தைச் சார்ந்த இரண்டு சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.தற்பொழுது கடந்த
ஒன்றை வருடங்களாக மணல் குவாரிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு விற்ற எம் சாண்டை கிரஷர் உரிமையாளர்கள் எம் சாண்டை 5000 ரூபாய்க்கும் பி.சாண்டை 6000 ரூபாய்க்கும் விற்க்கிறார்கள். தீவட்டி பட்டியில் சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் கிரஷர் நடத்தி வரும் டி பி எஸ் சேகர் ஓமலூர் டு தாரமங்கலம் ரோட்டில் ஹோண்டா கம்பெனிக்கு அருகில் எம் சாண்ட் சேமிப்பு கிடங்கு போட்டுள்ளார். தாரமங்கலத்தில் சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தா உரிமை யாளர்கள் எம் சாண்ட் மற்றும் ஜல்லி சப்ளை செய்து குடும்ப ஜீவனம் செய்து வருகிறோம். மேற்கண்ட இடத்தில் நாங்கள் நேரடியாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. என்று கூறினோம்.அவர் எங்களை மிரட்டுகிறார்.எங்களுக்கு டிபிஎஸ் சேகர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே எம் சாண்ட் சேமிப்பு கிடங்கை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டியும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பி பி எஸ் சேகர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கி உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.



