திண்டுக்கல் ஏப்ரல் 21
திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் ஏற்பாடு செய்த கோடைக்கால நீர் மோர் பந்தலை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திறந்து வைத்தார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கழகத் துணை பொது செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பி.பெரியசாமி வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக சார்பில் திமுக மேற்குப் பகுதி செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாட்டில் பேகம்பூர் பெரியபள்ளிவாசல் ஓரியண்டல் பள்ளி அருகில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநகர கழக செயலாளர் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மேற்கு மண்டல தலைவர் மாவட்ட துணைசெயலாளர் பிலால்உசேன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கோடைக்கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத், இளநீர்,பழ வகைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் K.S. அக்பர்,மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மேற்குப் பகுதி கழக நிர்வாகிகள் பாலதண்டபாணி, விஜயா, பாண்டி ,சக்கரை முகமது ,உஸ்மான் சார்பு அணி நிர்வாகிகள் முருகானந்தம்,இல. கண்ணன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் வைகை M.S.தாஜ்தீன், அயலக அணி திண்டுக்கல் மாநகர தலைவர் U.ரிஜ்வான் முகமது, திண்டுக்கல் மாநகர அமைப்பாளர் M.நசீர்,
முஸ்தாக் தேவி ,LPF உதயசூரியன், 40-வது வார்டு செயலாளர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், 23,24,25,26,27,39,42,43, 44 வது வார்டு செயலாளர்கள், வார்டு கழகத்தினுடைய நிர்வாகிகள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மாவட்ட மாநகர சார்பு அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், தினேஷ்பாபு, நாகூர் மீரான், ஐடி விங் அஸ்வத்,பாசித்,சேட் உட்பட 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.



