மயிலாடுதுறை, ஆக. 29 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விக்குடி கிராமம் கரைமேட்டுத் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு பின்னர் திருவேள்விக்குடி காவேரி கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் சார்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



