கிருஷ்ணகிரி,செப்.13- அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநில மாநாடு குறித்து கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலப்பட்டி சி.ரமேஷ், கிருஷ்ணன், முனியப்பன், நகர செயலாளர் கணபதி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்,சேலம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய்ச்சந்திரன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநாடு குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மைய மாவட்டத்தில் சார்பாக மாநாட்டிற்கு சுமார் 5000 பெண்களை திரளாக கலந்து கொள்ள செய்வது,ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராமங்கள் தோறும் விளம்பர பலகை சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்வது, ஒவ்வொரு ஒன்றியங்களிலும் கிராமம் மற்றும் நகரங்களில் மாநாடு குறித்து துண்டறிக்கைகளை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவை அதிகமாக புழங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையை கண்டிக்கிறோம், உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அம்பேத்கர் அரசு ஊழியர் ஐக்கிய மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன், வேப்பனப்பள்ளி ஒன்றிய பொருளாளர் சிவப்பிரகாசம், சூளகிரி ஒன்றிய பொருப்பாளர் பேபி, முருகம்மாள், லதா, சரஸ்வதி, பவுல்ராஜ், சிலம்பரசன், காவேரிப்பட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் பலராமன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி சி.ரமேஷ் நன்றி கூறினார்.



