ராமநாதபுரம், அக்.28 –
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியருக்கு வாலாந்தரவையில் வெண்கல உருவச்சிலை தனது சொந்த செலவில் தருவதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசினார்.
சுதந்திர போராட்ட மாமன்னர்கள் மருது பாண்டியரின் 223 வது குருபூஜை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் அருகே
வாலாந்தரவையில் உள்ள சின்ன மருது, பெரிய மருது உருவச்சிலைகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் பேசியதாவது:
ஆங்கிலேயரை எதிர்த்து 8 மாத காலம் போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியர் வீரத்தை நாம் அறிவோம். மருது சகோதரர்கள் கையில் வாளேந்தி குதிரையில் சென்று போரிட்டவர்கள் என்பதன் வீர வரலாற்றை வெளியுலகிற்கு பறைசாற்ற மருது பாண்டியர் வாளேந்தி குதிரையில் செல்லும் வெண்கல உருவச்சிலை என் சொந்த செலவில் நிறுவித்தருவேன் என்றார்.
திமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் கே.ஜே. பிரவீன்,
ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாலாந்தரவை கிராமத் தலைவர் தர்மா, செயலார் காந்தி (எ) கருணாநிதி, பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் நாகராஜன், துணை செயலாளர் சுரேஷ், தண்டல் குமார், நிர்வாகிகள் விஸ்வநாதன், ராஜேந்திரன், செல்வம், சேகர், பிரகாஷ், சத்தியேந்திரன், முனியசாமி, பாபு விஜி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.



