நாகர்கோவில் மார்ச் 5
குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை போலியாக தயாரித்து விழிப்புணர்வு குறும்படம் காண்பிப்பதாக கூறி பள்ளி மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐஎம்எல் குமரி மாவட்டச் செயலாளர் எஸ் எம் அந்தோணி முத்து தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என சுமா:-ர் 1800-க்கும் மேல் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இவற்றில் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களிடம் மரம் நடுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காண்பிப்பதாக கூறி ஒவ்வொரு குழந்தைகளிடமும் ரூபாய் 10 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களிடம் காண்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக ஒரு சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் மற்றும் சீல் இட்டு போலியாக உருவாக்கி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி ரூபாய் பத்து விதம் ஒவ்வொரு மாணவர்களிடமும் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி ஒரு சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர் அனுப்பவில்லை என்பது தெரிய வருகிறது.
சிறுதுள்ளி பெருவெள்ளம் போல இச்செயல் பெரும் மோசடியாகும்.
ஒரு செயல் செய்ய வேண்டுமெனில் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது.
ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் வசூலை செய்தது யார்? அதேபோல் மாவட்ட கல்வித்துறையும் எந்த ஒரு விசாரணையும் இன்றி இதை செயல்படுத்தி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் எந்தத் துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு குழந்தைகளிடமிருந்து வசூலித்த 10 ரூபாயை திரும்ப வழங்க வேண்டுமென சிபிஐஎம்எல் மாவட்ட கமிட்டி கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.