தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொடிக்குறிச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இடைகாலில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வேலாயுதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள குளத்தினை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் மழை வெள்ளம் தடுப்பு நடவடிக்கை பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



