பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.
நாகர்கோவில் ஆக 21
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால்
தமிழகத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் தீர்க்கப்படாத குறைகள் குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழக முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் அந்தந்த மின்வாரிய அலுவலகம் முன்பு ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டதிலும் நாகர்கோவில், பார்வதிபுரம் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும் மேலும் காலி பணியிடங்களில் பணி நிரந்தரம் செய்யும்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதேபோன்று 60,000 மேற்பட்ட காலி பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கண்டறிந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.